ஷிண்டேவுடன் ரோஹித் சர்மா. 
இந்தியா

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி பரிசுத் தொகை

டி20 உலகக் கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசு

DIN

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 1 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கிய நிலையில், பிசிசிஐ ரூ.125 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிசிசிஐயைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் அறிவித்துள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நான்கு மும்பை வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அப்போது உலகக் கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஷிண்டே மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவின் சிறப்பான கேட்ச்சை அவர் குறிப்பாக பாராட்டினார். அத்துடன் வியாழன் அன்று தெற்கு மும்பையில் நடந்த இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு கூட்டத்தை திறம்பட நிர்வகித்த மும்பை காவல்துறையினரையும் முதல்வர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

SCROLL FOR NEXT