ஆம் ஆத்மி எம்எல்ஏ கர்தார் சிங் தன்வார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் ஆனந்த் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்த், முதல்வர் கேஜரிவால் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். கலால் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டதையடுத்து, ஊழல் விவகாரத்தில் கட்சியில் இருந்து விலகினார்.
படேல் நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான தனது மனைவி வீணா ஆனந்த்துடன் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவின் தில்லி தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.