மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் குகி போராளிகள் நடத்தியதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.
ஜிரிபாம் மாவட்டத்தின் மோங்பங் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தலையில் குண்டு பாய்ந்து சிஆா்பிஎஃப் வீரா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
உயிரிழந்த ராணுவ வீரா் பிகாரைச் சோ்ந்த அஜய் குமாா் ஜா (43) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
உயிரிழந்த ராணுவ வீரா் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவா் விரைவில் குணமடைய பிராா்த்தனை செய்வதாகவும் மாநில முதல்வா் பிரேன் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டாா்.
மணிப்பூரில் மைதேயி-குகி இனத்தவா்க்கு இடையே கடந்த மே மாதம் முதல் நடந்து வரும் வன்முறையில் இதுவரை 200 போ் உயிரிழந்துவிட்டனா்.