கோப்புப் படம். 
இந்தியா

குஜராத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டது

குஜராத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது.

DIN

குஜராத் மாநிலம், ட்ங்ரி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் பயணிகளுக்கோ அல்லது ரயில்வே ஊழியர்களுக்கோ காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து தண்டவாளங்களை சீர்செய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான ரயில் சூரத் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மும்பையில் உள்ள மேற்கு ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில் இந்த ரயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அது முடிந்த கதை! ராமதாஸுடன் இணைவு பற்றி அன்புமணி!

Online Fine செல்லாது! ஓட்டுநரை மிரட்டும் காவலர்!

ஆட்டோவில் தவறவிட்ட ஒரு பவுன் பிரேஸ்லெட்!உரிமையாளரிடம் ஒப்படைத்த ஓட்டுநர்!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் சராசரியைவிட அதிகம்! - முதல்வர் ஸ்டாலின்

ரூ. 3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்கும் இந்தியா?

SCROLL FOR NEXT