பட்ஜெட்: கல்வி, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி!
மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன்.
மத்திய பட்ஜெட்டில் கல்வி, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்ற 4 இலக்குகளை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில், கல்வி, திறன் மேம்பாட்டு சிறு, குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 4.1 கோடி இளைஞர்களுக்கு 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கல்வி, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.