பிரதமர் மோடி படம் | பி டிஐ
இந்தியா

வீரர்களுக்கு தேசம் தலைவணங்குகிறது: கார்கில் விழாவில் பிரதமர் மோடி பேச்சு

வீரர்களுக்கு தேசம் தலைவணங்குகிறது என கார்கில் விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

DIN

கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு இந்த தேசம் தலைவணங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கார்கில் விஜய் திவாஸ் விழாவில் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

இந்த விழாவில் பேசிய மோடி, “நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம்.

தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவார்கள்.

இந்தியா மீதான தாக்குதல்கள் இன்றும் மறைமுகமாக தொடர்ந்து வருகிறது” என்றார்.

கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 4.1 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக ஷின்குன் லா சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT