முகப்பு
இந்தியா

ரயில்வே துறையின் பொற்காலம்: பாஜக எம்.பி.

2023ல் மட்டும் 5000 கி.மீ. ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

Updated On : 31 ஜூலை 2024, 4:08 pm IST
பகிர்:

`கடந்த 10 ஆண்டுகளை இந்திய ரயில்வே துறையின் பொற்காலம்’ என்று பாஜக எம்.பி. கூறியுள்ளார்.

புது தில்லியில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடத்தப்பட்டது.

விவாதத்தின்போது பேசிய பாஜக எம்.பி. அனில் பலுனி, ``ரயில்வே துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

ரயில்களைக் கனவு கண்ட பல பகுதிகளும், இப்போது ரயில் பாதைகளைக் கொண்டுள்ளன. நமது ரயில்களின் சராசரி வேகம், இப்போது மணிக்கு 80 கி.மீ. ஆகும்.

கடந்த ஆண்டில் மட்டும் 5000 கி.மீ. ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம் ’’ என்று தெரிவித்துள்ளார்.ரயில்களைக் கனவு கண்ட பல பகுதிகளும், இப்போது ரயில் பாதைகளைக் கொண்டுள்ளன. நமது ரயில்களின் சராசரி வேகம், இப்போது மணிக்கு 80 கி.மீ. ஆகும்.

கடந்த ஆண்டில் மட்டும் 5000 கி.மீ. ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம் ’’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments