இந்தியா

ம.பி.யில் ஜூன் 15-க்குள் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்னதாகவே தொடங்கும் என ஐஎம்டி கணித்துள்ளது.

DIN

மத்தியப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜூன் 15-க்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

கேரளம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கடந்த 30-ம் தேதி தொடங்கியுள்ளது. கேரளம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்குவது மிகவும் அரிதானது. இதற்கு முன்பு 2017, 1997, 1995 மற்றும் 1991ல் இவ்வாறு நடந்துள்ளது.

போபால் மையத்தின் ஆய்வாளர் பிரமேந்திர குமார் கூறுகையில்,

மத்தியப் பிரதேசத்தில் பருவமழை ஜூன் 15-க்குள் தொடங்கும். இந்தப் பருவத்தில் மாநிலத்தில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் சராசரி மழையளவு 949 மிமீ ஆகும். கடந்தாண்டு ஜூன் 25-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT