இந்தியா

ம.பி.யில் ஜூன் 15-க்குள் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்னதாகவே தொடங்கும் என ஐஎம்டி கணித்துள்ளது.

DIN

மத்தியப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜூன் 15-க்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

கேரளம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கடந்த 30-ம் தேதி தொடங்கியுள்ளது. கேரளம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்குவது மிகவும் அரிதானது. இதற்கு முன்பு 2017, 1997, 1995 மற்றும் 1991ல் இவ்வாறு நடந்துள்ளது.

போபால் மையத்தின் ஆய்வாளர் பிரமேந்திர குமார் கூறுகையில்,

மத்தியப் பிரதேசத்தில் பருவமழை ஜூன் 15-க்குள் தொடங்கும். இந்தப் பருவத்தில் மாநிலத்தில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் சராசரி மழையளவு 949 மிமீ ஆகும். கடந்தாண்டு ஜூன் 25-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT