முகப்பு
இந்தியா

தேர்தல் முடிவுக்கு பிறகு மோடி அரசில் உத்தவ் தாக்கரே இணைவார்: ரவி ராணா

Updated On : 3 ஜூன், 2024 at 8:07 AM
பகிர்:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களில் மோடி அரசில் உத்தவ் தாக்கரே இணைவார் என ரவி ராணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமராவதி எம்எல்ஏ ரவி ராணா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மோடி மீண்டும் பிரதமரான 15 நாட்களுக்குப் பிறகு, மோடி அரசில் உத்தவ் தாக்கரேவை காணலாம். ஏனென்றால் வரவிருக்கும் காலம் மோடியுடையது. உத்தவ் தாக்கரே அதை அறிவார்.

அமராவதி மக்களவைத் தொகுதியில் தனது மனைவி நவ்நீத் ராணா இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவருக்கு அதிக அளவில் வாக்களித்ததால் நவ்நீத் மீண்டும் எம்.பி.யாக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். அமராவதியின் சிட்டிங் எம்.பி.யான ரவி ராணாவின் மனைவி நவ்நீத் ராணா, மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக அமராவதியில் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ பல்வந்த் வான்கடே மற்றும் பிரஹர் ஜனசக்தி கட்சியின் தினேஷ் பப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதே அமராவதி தொகுதியில் இருந்து நவ்நீத் ராணா சுயேச்சையாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →