இந்தியா

'நான் பாதுகாப்பாக இருக்கிறேன்' - விடியோ வெளியிட்ட கங்கனா ரணாவத்!

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த எம்பி கங்கனா ரணாவத்தை, சிஐஎஸ்எஃப் அதிகாரி கன்னத்தில் அறைந்தார்.

DIN

பாலிவுட் நடிகையும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத், தில்லி செல்வதற்காக சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, வந்தபோது விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி குல்விந்தர் கௌர் அவரை கன்னத்தில் அறைந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில்,” ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. நான் பாதுகாப்பாக இருக்கிறேன்,எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறேன். சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் செக்யூரிட்டி ஒருவர் என் முகத்தில் அறந்தார். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன். ஆனால், பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து கவலை கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக, விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களால் குல்விந்தர் கௌர் அதிருப்தி அடைந்திருந்ததால், அவர் கங்கனா ரணாவத்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT