முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் செல்ஃபி மோகத்தால் இருவர் பலி

செல்ஃபி எடுக்க முயன்ற இருவர் ரயில் மோதி பலி

Updated On : 9 ஜூன், 2024 at 12:53 PM
கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ரயில் பாதையில் செல்ஃபி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் மீது ரயில் மோதி பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் ஜூன் 8ஆம் தேதி வல்தேவி ஆற்றுப்பாலம் அருகே ரயில் பாதையில், சங்கேத் கைலாஸ் ரதோட் மற்றும் சச்சின் திலீப் கார்வார் இருவரும் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, பின்னால் வந்த ரயிலைக் கவனிக்காததால், ரயில் அவர்கள் மீது மோதியுள்ளது. ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டதில், இருவரும் பாட்டியா கல்லூரியின் மாணவர்கள் என அறியப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.