மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்!
நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தில்லியில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான தேதி, 100 நாள்களில் மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரமராக தொடர்ந்து 3வது முறை நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கான துறைகள் இன்று ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.