‘காஷ்மீர் விடுதலை’ முழக்கம்: எப்ஃஐஆர் பதிவு செய்த காவல்துறை!
காஷ்மீர் விடுதலை குறித்த சுவரெழுத்து: தில்லி துவாரகாவில் எஃப்ஐஆர் பதிவு
தில்லி துவாரகா பகுதியில் சுவரில் ‘காஷ்மீர் விடுதலை’ சுவரெழுத்து காணப்பட்டது தொடர்பாக காவலர்கள் செவ்வாய்க்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
துவாரகா செக்டர் 13-ல் அமைந்துள்ள தில்லி வளர்ச்சி ஆணையத்தின் பூங்காவில் வரையப்பட்ட சுவரெழுத்தை (கிராஃபிட்டி) திங்கள்கிழமை மாலை காவலர்கள் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின்படியும் சொத்துக்கு சேதம் விளைவித்தல் பிரிவின்படியும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராயும் பணி நடைபெற்று வருவதாகவும் குற்றம் செய்தவர்களை விரைவில் கைது செய்யவிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.