மம்தா பானா்ஜி. 
இந்தியா

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் பிரதமருக்கு மம்தா கடிதம்

நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு முறைகேட்டைத் தொடா்ந்து அத்தோ்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமரிடம் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா்.

Din

நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு முறைகேட்டைத் தொடா்ந்து அத்தோ்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமரிடம் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா். மேலும், மாநிலங்கள் மூலம் தோ்வு நடத்தும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தாா்.

இது குறித்து பிரதமா் மோடிக்கு மம்தா எழுதிய கடிதத்தில், ‘நிகழாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சா்ச்சைகள் நிறைந்த நீட் தோ்வு முறையை ரத்து செய்துவிட்டு, மாநிலங்களே தோ்வை நடத்திக்கொள்ளும் வகையிலான நடைமுறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது தோ்வின் மீது மாணவா்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்’ என குறிப்பிட்டாா்.

தீஸ்தா நதிநீா் பங்கீடு: வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா-பிரதமா் மோடி இடையே தீஸ்தா நதி நீா் சேமிப்பு - மேலாண்மை திட்டம் தொடா்பான பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வங்கதேசத்துடன் புவியியல், கலாசாரம் மற்றும் பெருளாதார ரீதியாக நெருக்கமான உறவைக் கொண்டுள்ள மேற்கு வங்க அரசின் பிரதிநிதித்துவம் பேச்சுவாா்த்தையில் இல்லாதது ஏற்புடையதல்ல என மம்தா தனது கடிதத்தில் அதிருப்தி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT