படம் | ஏஎன்ஐ
இந்தியா

”சந்திரபாபு நாயுடு வெறும் பூஜ்ஜியம் மட்டுமே” -ஜெகன் மோகன் ரெட்டி சாடல்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ‘சித்தம் (தேர்தலுக்குத் தயாராகுங்கள்)’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன், அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இம்முறை இணைந்துள்ள நடிகர் பவண் கல்யாணின் ஜனசேனை கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. மறுபுறம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ‘சித்தம் (தேர்தலுக்குத் தயாராகுங்கள்)’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டம் அட்டாங்கி பகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று(மார்ச்.10) நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் கடுமையாக விமர்சித்தார்.

பொதுக்கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது, சந்திரபாபு நாயுடு வெறும் பூஜ்ஜியம் மட்டுமே... பிற கட்சிகளுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு ஒரு கூட்டணி அமைத்தால், அதன் முடிவு மிகப்பெரிய பூஜ்ஜியமாகத் தான் அமையும். 2014இல் அவர் அளித்த வாக்குறுதிகளை அவர் இன்னும் நிறைவேற்றவில்லை என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!

1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ.2,500 வரை குறையும் என எதிர்பார்ப்பு!!

SCROLL FOR NEXT