சோதனையில் கைப்பற்றப்பட்ட குக்கர்கள் ANI
இந்தியா

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து காவல்துறையினர் அழித்துள்ளனர்.

DIN

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திந்த 9 வெடிகுண்டுகளை போலீசார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.

இதுகுறித்து கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,

“திபகட் பகுதியில் வெடி மருந்து பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் 2 வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுக்களின் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினோம்.

மக்களவைத் தேர்தலை சீர்குழைக்கும் நோக்கில் திட்டமிட்டு மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியில் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து 9 ஐஇடி வகை வெடிகுண்டுகள், 6 குக்கர்கள், வெடிமருந்து பை மற்றும் டெட்டனெட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், அந்த வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT