அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யத் தொடங்குகிறது.
அண்டை மாநிலமான கேரளத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே.31ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.கடந்த ஆண்டு, ஜூன் 8-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், நிகழாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளது.
கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மே.19-ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement