இந்தியா

தெருநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு

Sasikumar

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி மாவட்டம், மெüதா நகரில் தெருநாய் கடித்து 3 வயது சிறுவன் உயிரிழந்தார்.

நாகபுரி மாவட்டம், மெüதா நகரில் வசித்த வான்ஸ் அன்குஷ் சஹானே என்ற மூன்று வயது சிறுவன் தனது வீட்டு வாசலில் செவ்வாய்க்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருநாய் சிறுவன் மீது பாய்ந்து அவரைக் கடித்தது. சிறுவனின் அலறல் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், பலத்த காயமடைந்த சிறுவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மெüதா நகர போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!

'நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும்'

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

உலகப் பெருந்தமிழா் நல்லகண்ணு!

நல்லகண்ணு உடல் தானம்!

SCROLL FOR NEXT