ஜம்மு-காஷ்மீர் விபத்து 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: கார் கவிழ்ந்து குழந்தை உள்பட மூவர் பலி!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்து..

பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் இன்று அதிகாலை கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 மாதக் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

சசானாவிற்கு அருகில் உள்ள சமலுமோர் என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றது. பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனியார் கார் ரியாசியிலிருந்து சசானாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

காரிலிருந்து மூவர் உயிரிழந்த நிலையில், மூவர் பலத்த காயமடைந்தனர். உள்ளூர் மக்கள் அவர்களை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT