FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

'நான் ஈ' படம் போல காகங்களும் பழிவாங்குமா? மனிதர்களை அடையாளம் காணுமா?

'நான் ஈ' படம் போல காகங்களும் பழிவாங்கும், மனிதர்களை அடையாளம் காணும் என ஆய்வில் தகவல்.

Updated On : 4 நவம்பர் 2024, 3:20 pm IST
காகங்கள் - Center-Center-Chennai
பகிர்:

பொதுவாக மனிதர்கள் தங்களுக்குத் தொல்லைக் கொடுத்தவர்களை பழிவாங்குவது என்பது வழக்கமானதுதான், ஆனால் பறவைகளும் விலங்குகளும் ஒருவரை நினைவில் வைத்து பழிவாங்குமா? என்ற கேள்விக்கு வாங்கும் என்றே பதில் கிடைத்திருக்கிறது.

பறவைகள் நிபுணர் ஒருவர் இதற்கான காரணத்தையும் ஆய்வின்போது கிடைத்த அனுபவத்தின் மூலம் விளக்கியிருக்கிறார்.

அதாவது, நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ஒருதனிப்பட்ட நபர் மீது காகம் கோபம் கொண்டால், அது நினைவில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் என்றும், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆய்வின் முடிவுகளை தற்போது உறுதிசெய்துகொண்டு வெளியிட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement

வாஷிங்டன் பல்கலையின் சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர் ஜான், தான் செய்த ஆய்வின் முடிவு குறித்து வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2006ஆம் ஆண்டு, காகங்கள் பழிவாங்குமா என்பதை அறிய விரும்பி ஆய்வில் இறங்கினார். இந்த ஆய்வின்போது, அவர் ஒரு முகமூடியை அணிந்துகொண்டு ஏழு காகங்களைப் பிடித்து கூண்டில் அடைத்தார். பிறகு, அந்த காகங்களின் இறகுகளில் ஒரு சிறு அடையாளத்தை மட்டும் வரைந்தார். பிறகு அவற்றை எதுவுமே செய்யாமல் வெளியே விட்டுவிட்டார். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் கல்லூரிக்கு வரும்போதும் அந்த காகங்கள் அவரை பின்தொடருவதும், அந்த முகமூடியை அணிந்தால், அவரைத் தாக்குவதுமாக இருந்துள்ளன.

இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், அடையாளமிடப்பட்ட காகங்கள் இவரைத் தாக்கும்போது மற்ற காகங்களும் சேர்ந்துகொள்ளுமாம். 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு காகங்களின் தாக்குதல் படிப்படியாகக் குறைந்திருக்கிறது. ஆனால், முடிந்துவிடவில்லை இந்த பழிவாங்கும் நடவடிக்கை.

இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு அதாவது 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் , அதே முகமூடியை அணிந்துகொண்டு ஜான் வெளியே நடக்கும்போது காகங்கள் அவரைப் பின்தொடரவோ அல்லது தாக்கவோ இல்லை. இதையடுத்து, ஆராய்ச்சியாளர் ஜான் தனது ஆய்வு முடிவை இதழில் வெளியிட முடிவு செய்துள்ளார். தான் பிடித்து வைத்த காகங்கள், தன்னை அடையாளம் கண்டுதான் தாக்கியிருக்கின்றன என்பது 17 ஆண்டுகளுக்குப்பிறகு அதே முகமூடியை அணிந்துகொண்டு வெளியே வந்ததன் மூலம் உறுதியாகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்னவென்றால், மனிதர்களைப் போலவே, காகத்தின் மூளையும், கோபம் போன்ற உணர்வுகளுக்கு செயல்படுகிறது. மனிதர்களை மட்டும் அது கவனிக்கவில்லை, மனித முகங்களையும் கூட அது நினைவில் கொள்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவர், காகங்களுக்குத் தொல்லைகொடுத்தால், அதனை அவை நினைவில் கொள்வதுடன் மற்ற காகங்களுக்கும் அந்த தகவலை கடத்துகிறது என்றும் ஆய்வாளர் கண்டறிந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments