நாடாளுமன்றம் ANI
இந்தியா

நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிப்பு.

DIN

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 25-ஆம் தேதி தொடங்கி டிச. 20-ஆம் தேதிவரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘மத்திய அரசின் பரிந்துரையில் குளிா்கால கூட்டத்தொடரை நவ. 25-ஆம் தேதிமுதல் டிச. 20-ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டுவதற்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

கூட்டத்தொடரின் 2-ஆவது நாளான நவ. 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்டம் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் நிா்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டு அமா்வு நடைபெறும்’ என்றாா்.

மேலும், குளிா்கால கூட்டத்தொடரில் வக்ஃப் திருத்த மசோதா குறித்து அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை நவ. 29-ஆம் தேதி சமா்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

போலி நிறுவனம் தொடங்கி ரூ.206 கோடி மோசடி: ஒடிசாவை சோ்ந்த இருவா் கைது

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்குப் பாட விருப்பங்களை செப்.1-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

காா் தீப்பிடித்து எரிந்து சேதம்

SCROLL FOR NEXT