முகப்பு
இந்தியா

பிகார் எம்.பி.க்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்?

பிகார் எம்.பி. ராஜேஷ் ரஞ்சனுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளித்துள்ளனர்.

Updated On : 7 நவம்பர் 2024, 9:38 pm IST
எம்.பி. ராஜேஷ் ரஞ்சன் - கோப்புப் படம்
பகிர்:

பிகார் எம்.பி. ராஜேஷ் ரஞ்சனுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளித்துள்ளனர்.

பிகார் எம்.பி. ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவின் உதவியாளரின் போனுக்கு வியாழக்கிழமை (நவ. 7) அதிகாலை 2.25 மணிக்கு கொலை மிரட்டலுடன் கூடிய குறுஞ்செய்தி பெறப்பட்டுள்ளது; தொடர்ந்து, காலை 9.49 மணிக்கும் மற்றொரு மிரட்டலுடன் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளனர்.

குறுஞ்செய்தியில், தாங்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ராஜேஷின் உதவியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறித்து ராஜேஷ் ரஞ்சன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் என்று பொய்கூறிய ஒருவரும் கடந்த மாதத்தில் கொலை மிரட்டல் விடுத்தார். இருப்பினும், விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் இல்லை என்பது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments