கோப்புப் படம் 
இந்தியா

ஒடிஸா: நகைப்பறிப்பு கொள்ளையர்களால் பலியான பெண்!

பைக்கில்இருந்து கீழே விழுந்த பலத்த காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

DIN

ஒடிஸாவில் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்து சென்ற விபத்தில் பெண் பலியானார்.

ஒடிஸாவில் புவனேஸ்வரில், பிஷ்ணு பத்ரா (45) என்பவர் கணவருடன் திங்கள்கிழமை (நவ. 12) பைக்கில் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இருவர், பிஷ்ணுவின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களிடமிருந்து பிஷ்ணுவும் அவரது கணவரும் தப்பித்துள்ளனர்.

இருப்பினும், அவர்களைத் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள், பிஷ்ணுவின் கழுத்திலிருந்த சங்கிலியைப் பறித்துச் சென்று தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவத்தின்போது, பைக்கில் இருந்து கீழே விழுந்த பிஷ்ணுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் பிஷ்ணு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், பிஷ்ணு புதன்கிழமையில் (நவ. 14) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 ரோஸஸ்... ஆஞ்சல் முஞ்சால்!

பிகார் இளைஞர்களே எனக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள்; போதும்! - தேஜஸ்வியின் டிஜிட்டல் பிரசாரம்

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

SCROLL FOR NEXT