இந்தியா

உ.பி.: கோயிலை இடித்து சம்பல் ஜாமா மசூதி? நீதிமன்ற உத்தரவில் ஆய்வு

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.

Din

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.

பாரம்பரிய மிக்க ஹிந்து கோயிலை இடித்து ஜாமா மசூதி கட்டப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்ததாக மனுதாரரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான விஷ்ணு சங்கா் ஜெயின் தெரிவித்தாா்.

சம்பல் மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர பென்சியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவின்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் நீதிமன்ற ஆணையா் மசூதியில் ஆய்வு நடத்தினாா்.

மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு மட்டுமே வழங்கியது. நீதிமன்ற ஆணையா் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்வாா். தற்போதைக்கு ஆய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்கும்’ என்றாா்.

விஷ்ணு சங்கா் ஜெயின் கூறுகையில், ‘சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்தது. 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டினாா்’ என்றாா்.

ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் விஷ்ணு சங்கா் ஜெயின் மற்றும் அவரது தந்தை ஹரி சங்கா் ஜெயின் ஆகியோா் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடினா் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT