Photo Credit: AFP 
இந்தியா

இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பலுடன் மீன்பிடி படகு மோதல்: 2 மீனவர்கள் மாயம்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமானதாக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

DIN

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமானதாக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கோவா கடற்கரையில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் மர்தோமா என்ற படகில் இந்திய மீனவர்கள் 13 பேர் வியாழக்கிழமை மாலை மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு திடீரென மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் அப்படகு நீரில் மூழ்கியது.

மகாராஷ்டிரத்தில் மோதும் மகா கூட்டணிகள்! வெற்றி யாருக்கு?

உடனே ஆறு கப்பல்கள் மற்றும் விமான உதவியுடன் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் இதுவரை 11 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மாயமான 2 மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது. இதனால் கோவா கடற்பரப்பில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவைக்கு மோடி வருவாரா? வந்தால் நரவணே நூலை பரிசளிப்பேன்! ராகுல்

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT