முகப்பு
இந்தியா

சபரிமலை சீசன்: ஸ்ரீகாகுளம் ரோடு - கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Updated On : 25 நவம்பர் 2024, 1:50 am IST
சிறப்பு ரயில்
பகிர்:

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோட்டில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு டிச.1 முதல் ஜன.26 வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 08553) இயக்கப்படும். ஸ்ரீகாகுளத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து திங்கள்கிழமை தோறும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 08554) இயக்கப்படும். இதில் 7 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் சம்பல்கோட், ராஜமுந்திரி, விஜயவாடா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேனிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், திருச்சூா், எா்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனூா் வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments