பாதிக்கப்பட பகுதியில் சரண் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விசாரணை 
இந்தியா

பிகார்: கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலி

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தது பற்றி...

DIN

பிகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விற்பனைக்கு தொடர்புடைய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 பேர் பலி

சிவான் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 20 பேர் இதுவரை சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில், சரண் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 4 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் உடல், பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT