முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 மாணவர்களின் நிலை?

பஞ்ச்குலா மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

Updated On : 19 அக்டோபர், 2024 at 9:53 AM
பேருந்து விபத்து
பகிர்:

ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பஞ்ச்குலா மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முதற்கட்ட தகவலின்படி, மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோர்னியில் உள்ள திக்கர் தால் அருகே உள்ள பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் இரண்டு மாணவர்கள் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் இருந்த மீதமுள்ள மாணவர்கள் மீட்கப்பட்டு பஞ்சகுலா செக்டார்-6 மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →