முகப்பு
இந்தியா

மோடி பிறந்தநாள்: 5 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டது எப்படி?

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி...

Updated On : 17 செப்டம்பர் 2024, 12:04 pm IST
மோடி(கோப்புப்படம்) - ANI
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்த நாளை, நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

26 லட்சம் வீடுகள்

Advertisement

Advertisement

பிரதமர் மோடி தனது 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கடகனாவில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 26 லட்சம் வீடுகளை திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கடகனா பகுதிக்குச் சென்று திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடுகிறார்.

அதன்பிறகு, ஜனதா மைதானத்துக்குச் செல்லும் பிரதமர், ஒடிசா மாநில அரசின் சுபத்ரா யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ், 21 முதல் 60 வயதுடைய பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

மேலும், ரூ. 2,800 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மற்றும் ரூ. 1,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

2023

கைவினைக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் விஸ்வகர்மா என்ற திட்டத்தை கடந்தாண்டு மோடியின் பிறந்த நாளன்று தொடங்கி வைத்தார்.

சர்வதேச கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்போ சென்டர் மற்றும் தில்லி விமான நிலையத்தின் எக்ஸ்பிரஸ் லைன் ஆகியவற்றின் விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், பிரதமரின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், 73-ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 73 கிலோ எடையுள்ள லட்டு வெட்டப்பட்டது.

73 கிலோ எடையுள்ள லட்டு - ANI

2022

சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் கீழ், நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி.

2021

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடியின் பிறந்த நாளில் மட்டும் 2.26 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு சாதனை படைத்தது.

2020

கரோனா தொற்று காரணமாக மோடியின் பிறந்த நாள் பெரிதளவில் கொண்டாடப்படவில்லை. நாடு முழுவதும் பல இடங்களில் ஏழை மக்களுக்கு ரேசன் பொருள்கள் விநியோகம் மற்றும் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

2019

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும், நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதையொட்டி கொண்டாடப்பட்ட விழாவில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments