முகப்பு
இந்தியா

பாட்னா என்ஐடி விடுதியில் மாணவி தற்கொலை!

சம்பவ இடத்தில் தற்கொலைக்கான கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 செப்டம்பர், 2024 at 5:21 AM
பகிர்:

பிகார் மாநிலம் பாட்னாவின் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின்(என்.ஐ.டி) மாணவி விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த மாணவி ஆந்திரத்தைச் சேர்ந்தவர். அவர் தங்கியிருந்த விடுதி அறையின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்தில் தற்கொலைக்கான கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணியளவில் தனது விடுதி அறைக்குள் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு அழைப்பு வந்தது. போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து அனைத்து அறிவியல் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மாணவி இறந்த தகவல் பரவியதையடுத்து, கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஏராளமான மாணவர்கள் திரண்டு, கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →