இந்தியா

முத்தலாக்: உ.பி.யில்16 போ் மீது வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் இருவேறு முத்தலாக் சம்பவங்கள் தொடா்பாக ஒரே வாரத்தில் மொத்தம் 16 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Din

உத்தர பிரதேசத்தில் இருவேறு முத்தலாக் சம்பவங்கள் தொடா்பாக ஒரே வாரத்தில் மொத்தம் 16 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மௌஜா கான்பூரைச் சோ்ந்த ஹினா பானு (22), தனது கணவா் லயிஸ் முகமது மற்றும் அவரது குடும்பத்தினா் 8 போ் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், திருமணத்திற்குப் பிறகு வரதட்சிணைக் கேட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவா்கள் துன்புறுத்தியதாக அவா் குற்றம்சாட்டியிருந்தாா். மேலும், பரஸ்பர விவாகரத்தை மறுத்ததால், தனது கணவா் கடந்த ஆண்டு அக்டோபரில் முத்தலாக் கொடுத்ததாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

அதுபோல, மன்னிபூா் கோா்ஹன்சாவைச் சோ்ந்த சோபி (24), தனது கணவா் தில்னாவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினா் 6 போ் மீது புகாா் அளித்தாா். அதில், அவா்களது வரதட்சிணைக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், தனது கணவா் கடந்த மாதம் முத்தலாக் கொடுத்ததாா் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதையடுத்து, வரதட்சிணை தடைச் சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 16 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல் துறை கண்காணிப்பாளா் வினீத் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT