அமித் ஷா 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள்: அமித் ஷா!

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பேரவைத் தேர்தல்

ஜம்மு - காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தோ்தல் நடைபெற்றுவருகிறது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க இருக்கின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்டத் தோ்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

அமித் ஷா எக்ஸ் தளப் பதிவு

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜம்மு-காஷ்மீரின் 2-ஆம் கட்ட தேர்தலில் வாக்களிக்கவுள்ள அனைத்து வாக்காளர்களும் பயங்கரவாதம் இல்லாத மற்றும் வளர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அதிகளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் பொன்னான எதிர்காலத்திற்காகவும், தாழ்த்தப்பட்டோர், பெண்களின் உரிமைகளுக்காகவும், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசுக்கு வாக்குகளை செலுத்துங்கள்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், வாரிசு அரசியல், ஊழலில் இருந்து விடுவிக்கவும் இன்றே வாக்களியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி நெருங்குவதால் ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

14 குழந்தைகள் இறப்பு: ம.பி.யில் மருத்துவா் கைது! இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு!

ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு குழாய் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

‘கோல்ட்ரிஃப்’ மருந்து உற்பத்தி நிறுவன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

நாகநாத சுவாமி கோயில் பாலாலயம்

SCROLL FOR NEXT