முகப்பு
இந்தியா

மோடி தலைமையில் இந்தியா...: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

அமெரிக்கா -இந்தியாவுக்கு இடையிலான உறவு குறித்து அவர் பேசியுள்ளார்.

Updated On : 17 ஜனவரி 2024, 6:35 pm IST
ஆண்டனி பிளிங்கன்
பகிர்:

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியதாகவும் பல இந்தியர்களின் வாழ்வில் நேர்மறையாக தாக்கத்தை உண்டாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் முயற்சியால் அமெரிக்கா- இந்தியா உறவு நெருக்கமாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

அதே வேளையில் ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்து இரு நாடுகளும் தொடர்ச்சியான உரையாடலில் உள்ளதாக அவர் கூறினார்.

வளர்ச்சி, மேம்பாடுக்கு இடையில் ஹிந்து தேசியவாதம் நாட்டில் மேலோங்கி வருவது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அதிபர் ஜோ பைடன் பதவிகாலத்தில் வெளியுறவு கொள்கையில் அடிப்படை உரிமைகள் சார்ந்தும் ஜனநாயகம் சார்ந்தும் கவனம் செலுத்த அமெரிக்கா விரும்பியதாகவும் அதன்படியே செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த கொள்கைகள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக மாறிவருவதையும் அந்த நாட்டுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் முந்தைய உறவின் அடிப்படையில் அமைவதாகவும் பிளிங்கன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments