கேரளத்தில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர்
கேரளத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்று மத்திய அமைச்சர் எம்.பி. ராஜேஷ்..
கேரள மாநிலத்தில் அடுத்தாண்டு நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் கூறினார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இடது ஜனநாயக முன்னணி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎஃப்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான எல்டிஎஃப்-க்கு முக்கிய எதிரியாக இருந்தாலும், பாஜக மாநிலத்தில் தனது பலத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் நடிகராக மாறிய அரசியல்வாதி சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
சிபிஐ(எம்) ஆலத்தூர் தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது, மீதமுள்ள இடங்களை யுடிஎஃப் கைப்பற்றியது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 19 சதவீத வாக்குகளைப் பெற்றது, அதே நேரத்தில் எல்.டி.எஃப் 33 சதவீதமாக இருந்தது, இதுவே 2019 தேர்தலில் 36 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் யு.டி.எஃப்45 சதவீதமாகவும், 2019-ல் 47 சதவீதமாக இருந்தது. இருப்பினும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராஜேஷ் கூறினார்.
அதேபோன்று பாஜகவும் கேரளத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இது கேரளத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய தேர்தல் பின்னடைவாக இருக்கும் என்று ராஜேஷ் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.