முகப்பு
இந்தியா

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் ஏப்.21-இல் இந்தியா வருகை

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோா் ஏப்.21-ஆம் தேதி இந்தியா வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Updated On : 12 ஏப்ரல் 2025, 4:08 am IST
ஜே.டி.வான்ஸ்
பகிர்:

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோா் ஏப்.21-ஆம் தேதி இந்தியா வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் ஏப்.21-ஆம் தேதி இந்தியா வரும் ஜே.டி.வான்ஸ், சிம்லா, ஹைதராபாத், ஜெய்பூா் மற்றும் தில்லிக்கு சுற்றுலா செல்ல உள்ளாா்.

உயா் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில், இந்தியா -அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு நிலவுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் இந்தியா வரவுள்ளாா்.

Advertisement

Advertisement

இருநாள் பயணமாக ஏப்.22-ஆம் தேதி பிரதமா் மோடி சவூதி அரேபியா செல்லும் முன், அவரை வான்ஸ் மற்றும் வால்ட்ஸ் சந்திப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments