இந்தியா

கர்நாடகத்தில் லாரி உரிமையாளா்கள் நள்ளிரவுமுதல் வேலைநிறுத்தம்!

அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு பல்வேறு பகுதிகளிலும் எதிரொலிக்கும் அபாயம்!

DIN

பெங்களூரு: கர்நாடகத்தில் நள்ளிரவுமுதல் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் பொருள்களை எடுத்துச்செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஃபோக்ஸ்லோவா கூட்டமைப்பு கா்நாடகத்தின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். இதில் கிட்டத்தட்ட 6 லட்சம் லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 196 லாரி சங்கங்கள் உள்ளன.

சுமார் 6 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என்பதால் அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு பல்வேறு பகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT