போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு
நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - மத்திய அரசு
புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை மறைந்தாா். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இன்றும் நாளையும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும். அதனைத்தொடர்ந்து, போப் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளிலும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேற்கண்ட 3 நாள்களும் அனைத்து பகுதிகளிலும் அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழகத்திலும் இன்றும் நாளையும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.