முகப்பு
இந்தியா

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

குறைந்தபட்ச தண்டனை கேட்டு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார் பிரஜ்வால் ரேவண்ணா

Updated On : 2 ஆகஸ்ட் 2025, 1:50 pm IST
பிரஜ்வால் ரேவண்ணா - PTI
பகிர்:

புது தில்லி: முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார்.

வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியிடப்பட உள்ளது.

இன்று காலை, நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜரானார். தண்டனை விவரங்கள் தொடர்பான விவாதத்தின்போது, குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு பிரஜ்வல் சப்தமாகக் கதறி அழுதார்.

Advertisement

Advertisement

வாதங்கள் நிறைவடைந்து, தண்டனை விவரம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு வழங்கப்படவிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், சாட்சிகளை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜனனா பட் தீர்ப்பளித்திருந்த நிலையில், இன்று தண்டனை விவரம் வெளியிடப்படவிருக்கிறது.

பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 14 மாதங்களில், நீதிமன்றத்தில் விசாரணைத் தொடங்கி 8 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, கண்ணீர் விட்டு அழுதார் பிரஜ்வல் ரேவண்ணா. இன்று வாதம் நடைபெற்ற போது, வாய்விட்டுக் கதறி அழுதார், பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்ச தண்டனை கேட்டு.

நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நீதிமன்றத்துக்கு வரவில்லை என்பதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments