முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஏழு பேர் பலி

ஜார்க்கண்டின் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் பாய்ந்ததில் 7 பேர் பலியாகினர்.

Updated On : 8 ஆகஸ்ட் 2025, 7:32 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

ஜார்க்கண்டின் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் பாய்ந்ததில் 7 பேர் பலியாகினர்.

ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நேற்று பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர். பலமுவில் 4 பேர், குந்தியில் 2 பேர் மற்றும் சாய்பாசாவில் ஒருவரும் பலியாகினர். பலமு மாவட்டத்தில் வயல்களில் நெல் நடவு செய்யும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.

இதனிடையே பலமு மற்றும் சத்ரா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகுர், கோடா, தியோகர், தும்கா, ஜம்தாரா மற்றும் சாஹிப்கஞ்ச் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை அல்லது மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அன்புமணி - ராமதாஸ் தரப்பு விசாரணை நிறைவு

எனவே, குடியிருப்பாளர்கள், விவசாயிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மழை பெய்யும் போது திறந்தவெளிகளில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு விவசாயிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வருவதால், அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

summary

In the last 24 hours, at least seven people were killed due to lightning accompanied by heavy rains in various districts of Jharkhand.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.