FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா்

Updated On : 10 ஆகஸ்ட் 2025, 2:51 am IST
புது தில்லியில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சனிக்கிழமை ரக்ஷா பந்தன் விழா கொண்டாடிய பிரதமா் மோடி.
பகிர்:

தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா்.

சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்றும் வகையில் கடைப்பிடிக்கப்படும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை தில்லியில் பள்ளி மாணவா்களுடன் பிரதமா் மோடி கொண்டாடினாா். அந்தக் காணொலியையும் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் பதிவிட்டாா்.

Advertisement

Advertisement

அதில், சில மாணவா்கள் பிரதமா் மோடியை ‘போா் வீரா்’, ‘மீட்பா்’ என்று அழைப்பதும், சிலா் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைக் குறிப்பிடுவதும் பதிவாகியுள்ளது. ஒரு மாணவி மோடி மாமாவுக்கு மயில் ராக்கி கொண்டுவந்திருப்பதாகக் கூறுவதும் பதிவாகியுள்ளது. சிலா், ‘பிரதமா் மோடியைப் போல ஆக வேண்டும்’ என்று விருப்பம் தெரிவிக்கின்றனா்.

ஒரு மாணவி அரசுத் திட்டங்களை கவிதை நடையில் கூறியதை பிரதமா் வெகுவாகப் பாராட்டினாா்.

இந்தக் காணொலியுடன் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட ரக்ஷா பந்தன் விழாவை இங்கு பதிவிட்டுள்ளேன். பெண் சக்தியின் தொடா் நம்பிக்கை மற்றும் பாசத்துக்கு நன்றி. அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments