முகப்பு
கோப்புப்படம்.
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் மினி பேருந்தும் லாரியும் மோதல்: குஜராத் இசைக் குழுவின் 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவின் 4 பேர் பலியாகினர்.

இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் மினி பேருந்தும் லாரியும் மோதல்: குஜராத் இசைக் குழுவின் 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவின் 4 பேர் பலியாகினர்.

Updated On : 16 ஆகஸ்ட், 2025 at 3:55 PM
கோப்புப்படம்.
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவின் 4 பேர் பலியாகினர்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை நடத்திவிட்டு குஜராத்திற்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர். ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை காலை 6 மணியளவில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தவறான பாதையில் திரும்பியதால் விபத்து நிகழ்ந்தது. இதில் இசைக்குழு உறுப்பினர்களான ஹார்திக் டேவ் (37), பாடகர் ராஜா தாக்கூர் (28), அங்கித் தாக்கூர் (17), ராஜேந்திர சோலங்கி (47) ஆகியோர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், 17 பேருடன் வந்த மினி பேருந்தின் ஓட்டுநர், வாரணாசியில் இருந்து இடைவிடாமல் பயணித்ததால், சோர்வு காரணமாக மயக்கமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது என போலீஸ் அதிகாரி கூறினார். நான்கு பேரின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

படுகாயமடைந்த இருவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. "காயமடைந்த ஓட்டுநரின் உடல்நிலை சீராகி பேசத் தொடங்கிய பிறகு, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்" என்று போலீஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

summary

Four members of a Gujarat-based music band were killed and 11 other persons were injured on Saturday in a collision between a mini bus and a small truck in Shivpuri district of Madhya Pradesh, police said.

முழு கட்டுரையைப் படிக்க →