FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - அமித் ஷா

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு, கனமழை...

Updated On : 17 ஆகஸ்ட் 2025, 12:05 pm IST
கதுவா - PTI
பகிர்:

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பால் பெய்த கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இது குறித்து ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் விவரங்களைக் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்பகுதிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்.

இது குறித்து இன்று காலை அவர் தெரிவித்திருப்பதாவது: "பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மீட்புப்பணிகள் உள்ளூர் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களும் அங்கு விரைந்துள்ளன.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகக்கு மோடி அரசால் அனைத்து உதவியும் வழங்கப்படும். ஜம்மு - காஷ்மீரின் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

summary

Union Home Minister Amit Shah spoke with J&K LG and CM regarding the cloudburst in Kathua.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments