ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு 
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஏற்பட்ட மேகவெடிப்பால் 4 பேர் பலியான நிலையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி என்ற கிராமத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஒரே இரவில் பெய்த கனமழையால், அந்தக் கிராமத்திற்குச் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டப் பகுதிக்கு செல்ல தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு, உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியால், சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மேலும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த இயற்கை பேரழிவால் இதுவரை 60 பேர் உயிரிழந்ததுடன் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A cloudburst struck the remote village of Jod Ghati in Jammu and Kashmir’s Kathua district during the early hours of Sunday, claiming four lives and leaving six others injured, officials confirmed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

அழகிய கண்ணே... ஐஸ்வர்யா மேனன்!

இதயத்தை எடுத்து விட்டாய்... அனன்யா!

SCROLL FOR NEXT