ஆசாராம் பாபு 
இந்தியா

ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர் தனது ஆசிரமத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சூரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கியது.

வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆசாராம் பாபுவின் தற்காலிக ஜாமீனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த நிலையில் நீதிபதிகள் இலேஷ் வோரா, பி.எம். ராவல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கு அடுத்ததாக செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரது இடைக்கால ஜாமீன் மனுவை ஆகஸ்ட் 29 ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விசாரிக்கும். அதன்படி, ஆசாராம் பாபுவுக்கு திங்கள்கிழமை அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, ஆசாராம் பாபுவின் உடல்நிலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் 31 வரை அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் இலேஷ் ஜே வோரா மற்றும் நீதிபதி பி.எம். ராவல் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்துக் கேட்டனர்.

ஜூலை 3 ஆம் தேதி இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் ஆசாராமின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால், அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்ற விலக்கு அளித்திருந்தது.

இந்த நிலையில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, தற்காலிக ஜாமீனை நீட்டிக்கக் கோரி, ஆசாராம் பாபு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதன்படி, அவரது இடைக்கால ஜாமீன் மீண்டும் வருகிற செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The Gujarat High Court on Tuesday extended till September 3 the temporary bail granted to self-styled godman Asaram Bapu, who was convicted in a 2013 rape case and sentenced to life imprisonment by a Gandhinagar court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவில் விமானப் பணியாளர்களின் போராட்டம் முடிவு!

சௌதி சூப்பர் கோப்பையில் சர்ச்சை: அல்-நாஸர் வீரருக்கு ரெட் கார்டு!

கண்கள் நீயே... மாளவிகா மனோஜ்!

அந்தி மாலை நேரம்... ஷெரின்!

பேன்ட் பாக்கெட்டில் போன்... மடியில் லேப்டாப் வைத்தால்? -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

SCROLL FOR NEXT