போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்கள்.  
இந்தியா

மிசோரமில் ரூ.75.82 கோடி போதைப்பொருள் பறிமுதல்

மிசோரமில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மிசோரமில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மிசோரமில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிசோரமின் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறை ஆகியவற்றுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஐஸ்வால்-சாம்பாய் சாலையில் வியாழக்கிழமை மாலை வாகனங்களை வழிமறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த நான்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஐஸ்வாலில் உள்ள கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் ​50 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் மற்றும் மூன்று சோப்புப் பெட்டிகளில் ஹெராயின் மீட்கப்பட்டன.

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

இவற்றின் மதிப்பு ரூ.75.82 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ்வாலில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் இந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

During a search in the presence of civil witnesses, 50 kg of methamphetamine tablets and three soap cases of heroin were recovered.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவைக்கு மோடி வருவாரா? வந்தால் நரவணே நூலை பரிசளிப்பேன்! ராகுல்

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT