கணவர் விபின் உடன் நிக்கி  ஏஎன்ஐ
இந்தியா

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது என்று மரண வாக்குமூலத்தில் நிக்கி சொன்னதாக மருத்துவர்கள் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வரதட்சிணைக் கொலையில், சிலிண்டர் வெடித்ததே தீ பற்றியதற்குக் காரணம் என நிக்கி கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீயில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிக்கியிடம் மருத்துவர்கள் எப்படி நேர்ந்தது என்று கேட்டதற்கு, சிலிண்டர் வெடித்து, தீப்பற்றியதாகக் கூறியிருக்கிறார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறையினரிடம் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.

ஆனால், காவல்துறையினரோ, நிக்கி வீட்டில் சிலிண்டர் வெடித்ததற்கான எந்த தடயத்தையும் காணவில்லை. மரணமடையும் தருவாயில் நிக்கி அவ்வாறு கூறியது ஏன் என்றும், அவ்வாறு சொல்ல வலியுறுத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்துவதாகக் கூறியிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வரதட்சிணைக் கேட்டு மனைவி நிக்கியை தீயிட்டுக் கொளுத்திக் கொலை செய்த வழக்கில் விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கியை துன்புறுத்தும் விடியோக்களும், அவர் தீ வைத்து எரிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை பலனின்றி நிக்கி பலியான நிலையில், 80 சதவீத தீக்காயமே மரணத்துக்குக் காரணம் என உடல் கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நிக்கியின் சகோதரி காஞ்சன் அளித்த புகாரில், வரதட்சிணை கேட்டு, கணவர் விபின்தான், 6 வயது மகன் கண் முன்னே, தீவைத்துக் கொளுத்தியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT