கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ENS
இந்தியா

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நாளை விருந்தளிக்கிறார் டி.கே.சிவகுமார்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் இல்லத்திற்கு காலை உணவு விருந்திற்காக முதல்வர் சித்தராமையா நாளை(டிசம்பர் 2) செல்லவுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் இல்லத்திற்கு காலை உணவு விருந்திற்காக முதல்வர் சித்தராமையா நாளை(டிசம்பர் 2) செல்லவுள்ளார்.

இது இரு தரப்பினருக்கிடையேயான கருத்து மோதலை தற்காலிகமாக நிறுத்துவதற்கான முயற்சியாகக் பார்க்கப்படுகிறது. மேலும், டிசம்பர் 8 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் சித்தராமையா முதல்வராக தொடர்ந்து நீடிப்பார் என்பதையும் இது காட்டுகிறது.

முதல்வா் பதவி தொடா்பாக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது. இந்த அரசியல் மோதல், ஜாதி மோதலாகவும் உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ் மேலிடம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இருவரும் சந்தித்து பேசி இந்த விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், சித்தராமையா தனது பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்துக்கு துணை முதல்வா் டி.கே.சிவகுமாரை சனிக்கிழமை அழைத்து காலை உணவு விருந்தளித்தாா். அப்போது, இருவரும் 30 நிமிடங்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது, காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதலின்படி சுணக்கம் இல்லாமல் இருவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்றனா்.

Karnataka Chief Minister Siddaramaiah is scheduled to visit his deputy D K Shivakumar's residence on December 2, in an effort to demonstrate unity and a truce following months of power tussle within the ruling Congress in the state, official sources said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை தொடரும்!

வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு!

'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற ரஜினிகாந்துக்கு சீமான் வாழ்த்து

தஞ்சையில் திமுக நிர்வாகி ஏகேஎஸ் விஜயன் வீட்டில் 300 சவரன் நகை திருட்டு!

சென்னை உள்பட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

SCROLL FOR NEXT