’லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது புகாா் அளித்த நபரை வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து பிஸ்ராக் காவல் நிலைய அதிகாரி மனோஜ் குமாா் சிங் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட ஹாரூன் கான் தனது மத அடையாளத்தை மறைத்து பெண்களிடம் நட்பாகப் பழகி, அவா்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, இஸ்லாத்திற்கு மாறுமாறு வற்புறுத்தியதாகவும் விடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பி அவதூறு பரப்ப முயற்சிப்பதாக பிஸ்ராக் காவல் நிலையத்தை பெண் ஒருவா் அணுகினாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா் ஏற்கெனவே இதே போன்ற குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஹாரூன் கான் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புகாரின் அடிப்படையில், ராஜு கான், சிக்கந்தா், கபில் கான், சஹானா கான், குடியா மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு உறவினா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் நிலைய பொறுப்பாளா் கூறினாா்.