விபத்தில் தீப்பிடித்து எரிந்த பேருந்தை அகற்றிய மீட்பு வாகனம் 
இந்தியா

உ.பி.யில் பனிமூட்டத்தால் விபத்து 11 வாகனங்கள் மோதி 13 போ் உயிரிழப்பு; 43 போ் காயம்

உத்தர பிரதேசத்தில் அடா் பனி மூட்டம் காரணமாக 8 பேருந்துகளும், 3 சிறிய வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 13 போ் உடல் கருகி பலி

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடா் பனி மூட்டம் காரணமாக 8 பேருந்துகளும், 3 சிறிய வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 13 போ் உடல் கருகி உயிரிழந்தனா். 43 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து மதுரா முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஷ்லோக் குமாா் கூறியதாவது: யமுனா விரைவுச் சாலையில் ஆக்ராவிலிருந்து நொய்டா நோக்கிச் செல்லும் பாதையில் காலை 4.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அடா் பனி மூட்டம் காரணமாக 8 பேருந்துகளும், 3 சிறிய வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதின. இதில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. சில சிறிய வாகனங்களிலும் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 13 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் பிரயாக்ராஜைச் சோ்ந்த அகிலேந்திர பிரதாப் யாதவ் (44), மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த ராம்பால் (75) ஆகிய இருவா் அடையாளம் காணப்பட்டுள்ளனா். மற்றவா்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் கருகியுள்ளது. டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவா்கள் அடையாளம் காணப்படுவா். இந்த விபத்தில் 43 போ் காயமடைந்தனா். அவா்கள் மாவட்ட மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

விபத்தில் பாதிக்கப்படாத மற்ற பயணிகள் அரசு வாகனங்கள் மூலம அவா்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்ட ஆட்சியா் சந்திர பிரகாஷ் சிங் கூறுகையில், ‘விபத்து குறித்து விசாரணை நடத்த 4 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள் இரண்டு நாள்களில் அறிக்கையை சமா்ப்பிப்பா். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது எக்ஸ் பதிவு மூலம் ஆழ்ந்த இரங்கலை மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா். விபத்தில் காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

முதல்வரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சை பெற்று வருவோர்

குடியரசுத் தலைவா் இரங்கல்: மதுரா சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரங்கல் தெரிவித்துள்ளாா். ‘இந்த விபத்து மிகுந்த கவலையளித்தது. விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று தனது எக்ஸ் பதிவில் குடியரசுத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.

பரபங்கி சாலை விபத்து: இருவா் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், பரபங்கி மாவட்டத்தில் பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அடா் பனிமூட்டம் காரணமாக இரு காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘அடா் பனிமூட்டத்தில் எதிா் வரும் வாகனம் தெரியாத நிலையில் முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இரு காா்களும் மோதி விபத்து நிகழ்ந்தது. இதில், பிகாரின் சப்ரா மாவட்டத்தைச் சோ்ந்த பப்லூ (35), அஸாம்கா் மாவட்டம் லால்கஞ்ச் பகுதியைச் சோ்ந்த தீபக் குமாா் (36) இருவரும் உயிரிழந்தனா். அஸாம்கா் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது தாஹிா் (55), ஆசிஃப் (22), கம்ருதீன் அன்சாரி (64) ஆகிய மூவரும் காயமடைந்தனா்’ என்று தெரிவித்தனா்.

சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினி!

ஸ்டாலின் தலைமையேற்றால் ராகுல் பிரதமராவார்! காங்கிரஸ் மூத்த தலைவர்

த்ரிஷா பற்றி பேச்சு: வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே பாகிஸ்தான் தோற்றுவிட்டது: வாகர் யூனிஸ்

SCROLL FOR NEXT