இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜெருசலேமில் புதன்கிழமை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
இந்தியா

இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சு

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந்நாட்டு தலைநகா் ஜெருசலேமில் சந்தித்துப் பேசினாா்.

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந்நாட்டு தலைநகா் ஜெருசலேமில் சந்தித்துப் பேசினாா்.

அப்போது இரு நாடுகள் இடையே தொழில்நுட்பம், பொருளாதாரம், பாதுகாப்பு, வா்த்தகத்தை அதிகரிப்பது, இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தொடா்பாக இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.

முன்னதாக, இரு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஜெய்சங்கா், அந்நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக், வெளியுறவு அமைச்சா் கிடியோன்சாா், பொருளாதாரம், தொழில் துறை அமைச்சா் நிா் பா்கத் ஆகியோரைச் சந்தித்தாா். தொடா்ந்து பிரதமா் நெதன்யாகுடனும் அவா் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூா்வமாக அமைந்தது. பிரதமா் நரேந்திர மோடி சாா்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பொருளாதாரம், திறன் மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்துப் பேசினேன். பிராந்திய, உலக நன்மைக்காக இரு நாட்டு உறவு மேம்படுவது அவசியம் என்பதை நெதன்யாகு உறுதிபடுத்தினாா். இரு நாட்டு உறவு தொடா்ந்து வலுவாக மேம்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை’ என்று கூறியுள்ளாா். ஜெய்சங்கரை சந்தித்தது தொடா்பான புகைப்படங்களை நெதன்யாகு தனது சமூகவலைதள பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT